Tuesday, January 15, 2019

நெகிழிகளால் நிலம்கெடுமே கிரந்தெழுத்தால் தமிழ்கெடுமே


நெகிழிக் காகிதங்கள் நிறையவே பயன்படுத்தி
அகிலத்திற் குணவளிக்கும் அருமைமிகு நிலங்களின்று
துகிலுரித்த உடலாகி தூய்மையெல்லாம் பறந்ததினால்
மகிழத்தான் முடியலையே மாற்றுவழி என்னமச்சான்?

சரியாகச் சொல்லிவிட்டாய் சற்றுகொஞ்சம் சிந்தித்தால்
அறியாமல் செய்துவந்த அச்செயலை மாற்றிடவும்
புரியாமல் செய்துவந்த புத்தியினை தீட்டிடவும்
தெரியாமல் செய்தவற்றை திருத்தவழி உண்டுபுள்ளே!

இந்தக் கொடுமைகூட எளிதாக மறந்திடலாம்
நந்தம் தமிழோடு நஞ்செனவே கிரந்தெழுத்தை
சொந்தம் கொண்டாடி சூசகமாய் நம்தமிழில்
வந்தேறி மொழிக்கலப்பை வதைக்கவழி என்னமச்சான்?

சஞ்சலம் தவிர்த்துவிடு சட்டென்றோர் வழிசொல்வேன்
அஞ்சாமல் நற்றமிழை அருமைமிகு தனித்தமிழை
நெஞ்சாரப் போற்றாமல் நீசமொழி கலந்துவக்கும்
வஞ்சகர் நாக்கறுக்க வழியொன்று உண்டுபுள்ளே!

கொஞ்சுமொழி பேசுகிற குழந்தைக்கும் இதைச்சொல்லி
வஞ்சனைகள் செய்கின்ற வாய்ச்சொல்லின் வீரர்களை
கெஞ்சினாலும் மிஞ்சினாலும் கிட்டவந்து துஞ்சினாலும்
அஞ்சாமல் வெஞ்சிறையில் அடைத்துநம் தமிழ்காப்போம்!

காப்போம் காப்போம் கழனிகள் காப்போம்
சேர்ப்போம் சேர்ப்போம் செழிப்பினை தமிழில்
மீட்போம் மீட்போம் மிடுக்குடன் தமிழை
ஓய்ப்போம் ஓய்ப்போம் கிரந்தெழுத் தினையே!
                 [30.12.2918]                                  

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...